அடப்பாவி இப்படியா பண்ணுவ?… திருடச் சென்ற இடத்தில் கும்பகர்ணனாக மாறிய திருடன்.. பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்..!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டம் பிரிடி என்ற கிராமத்தை சேர்ந்த சீனிவாச ராவ் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்று உள்ளார். இதனை அறிந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்ற வாலிபர் நைசாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த வெள்ளி பொருட்களை திருடியுள்ளார். பிறகு அதனை கடையில் விற்ற அவர் அதன் மூலம் கிடைத்த பணத்திற்கு மது அருந்தினார். நன்றாக குடித்துவிட்டு திருடிய வீட்டு கேச் சென்று நன்றாக தூங்கியுள்ளார். பகல் முழுவதும் வெளியே சுற்றி திரியும் திருடன் இரவு நேரங்களில் திருடப்பட்ட அதே வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 5 நாட்களாக இதே வேலையை செய்து வந்தான்.

இதனிடையே சீனிவாச ராவ் மறுநாள் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிலிருந்த பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. ஒரு பக்கம் வீட்டுக்குள் கிருஷ்ணா நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். உடனே சீனிவாசராவ் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருஷ்ணாவை எழுப்பி கைது செய்தனர். அவரை கைது செய்து டேனியல் ஏற்றிய போது அங்குமவர் படுத்து தூங்க முயன்றார். உடனே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடச் சென்ற இடத்திலேயே தூங்கிய இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.