விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் தான் நடிகை விசித்ரா. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென மீண்டும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே எழுந்துள்ளது என்று கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பூகம்பம் டாஸ்கில் தான் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமான சம்பவங்களை விசித்ரா பகிர்ந்து கொண்டார்.
அதாவது அவர் சொன்ன அந்த பாலியல் வன்கொடுமை கேரளாவில், மலம்புழாவில் நடந்த அந்த ஷூட்டிங்கில், நைட் என்னோட ரூமுக்கு வந்துடு என, விசித்ரராவுக்கு அதிரடி கட்டளையிட்டவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும், விசித்ராவை கன்னத்தில் அறைந்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ விஜய் என்றும், 2001ல் நடந்த அந்த சம்பவம், பலேவடிவி என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில்தான் நடந்தது என்றும் முடிவாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே ஓட்டலில் நடந்த சம்பவம் குறித்து, அன்று அந்த ஓட்டலில் ஜெனரல் மேனேஜராக இருந்த, அதன்பிறகு விசித்ராவின் கணவராக மாறிய சாஜியும் கூறியிருந்தார். அவர் ‘ விசித்ரா சொன்ன அத்தனையும் உண்மை. இப்போதும் அந்த பிரபல நடிகர் குறித்து வெளியே பகிரங்கமாக சொன்னால் எனக்கும், என் மனைவிக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை என்பதால் சொல்லாமல் இருப்பதே எங்களுக்கு நல்லது’ என்று சொல்லியிருந்தார்.
தற்பொழுது விசித்ராவை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து மௌனம் கலைந்து வருகின்றனர். தற்பொழுது காதல் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்த நடிகை சரண்யா தனக்கு படப்பிடிப்பில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘ விசித்ரா சொன்னது போல திரைத்துறையில் நிறைய நடந்து வருகிறது. நிறைய நடிகைகள் கஷ்டத்தினை அனுபவிக்கின்றனர்.
எனக்கும் கூட நிறைய மோசமான அனுபவங்கள் நடந்து இருக்கிறது. நாம் பெரிய நடிகையாக இருக்கும் போது எது சொன்னாலும் நடக்கும். சின்ன நடிகையாக இருக்கும் போது நாம் எவ்வளவு பிரச்னையை சந்தித்தாலும் அதை வெளியில் சொன்னால் பெரிதாக எடுப்படாது. மீடியாவை தெரிந்து தானே உள்ளே வந்தீங்க. இப்படிதானே இருக்கும் என இளக்காரமாக பேசுவார்கள். சினிமாத்துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலும் இதே மாதிரி பிரச்னை இருக்கத்தான் செய்கிறது.’ என்று கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…