மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகியோர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இரவு ஒரு விருந்துக்குப் பிறகு தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அவர்களுக்குக் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நான்கு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறை தனது முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதில், உயிரிழந்தவர்களின் உடலில் எந்தவிதமான “பாக்டீரியா தொற்று” இருந்ததற்கான ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அவர்களின் இரத்த மாதிரிகளில் பாக்டீரியாக்கள் எதுவும் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணங்களுக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குடும்பத்தினர் சாப்பிட்ட ‘சிக்கன் புலாவ்’, தர்பூசணி மற்றும் குடிநீர் போன்ற உணவு மாதிரிகள் ஆய்வுக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆய்வகத்தின் இறுதி அறிக்கை வந்த பிறகுதான், உணவில் ஏதேனும் விஷத்தன்மை இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெளிவாகத் தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…