அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததற்குப் பதிலடியாக, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் கே.கணேஷ்பாண்டி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் இந்த இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்தலை எதிர்நோக்கி உள்ள சூழலில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இரு திராவிடக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் விலகியது அக்கட்சிக்கு அந்த மாவட்டத்தில் சற்றே பின்னடைவாகக் கருதப்படுகிறது.
