“பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்காதீங்க” ரயிலில் இருந்து பாகிஸ்தானிய பெண்ணை கீழே தள்ளிவிட்ட துருக்கி பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோவால் இணையவாசிகள் அதிர்ச்சி..!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love
துருக்கியில் ஒரு பாகிஸ்தானியப் பெண் தன் குழந்தையுடன் தள்ளுவண்டியில் செல்லும் போது, அங்கிருந்த பெண்கள் அவரைத் தாக்கி ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாய் என்றும் பாராமல், குழந்தையுடன் இருக்கும் பெண்ணை உடல் ரீதியாகத் தாக்குவது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. அங்கிருந்த சிறுமி ஒருத்தி இச்சம்பவத்தைக் கவனிப்பது, இத்தகைய வன்முறைப் போக்கு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுமோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது. குழந்தைகளின் முன்னிலையில் நிகழும் இத்தகைய வெறுப்புணர்வுகள் அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கக்கூடும்.

துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக ஒரு நல்லுறவைப் பேணி வருகின்றன. ஆனால், சமீபகாலமாகத் துருக்கியி.ல் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் குடியேற்றவாசிகள் (Migrants) மீதான சில உள்ளூர் மக்களின் அதிருப்தி இத்தகைய கசப்பான சம்பவங்களுக்குக் காரணமாக அமைவதாகக் கூறப்படுகிறது. அரசாங்கங்கள் காட்டும் “நட்பு” என்பது மக்களின் அன்றாட வாழ்வில் பிரதிபலிக்காதபோது, இதுபோன்ற சம்பவங்கள் அந்த நட்புறவின் உண்மை