அட கொடுமையே… உயிரைக் காப்பாற்றிய மக்களிடம்… என்னைக் கேட்க நீங்கள் யார்?… மனதை உலுக்கிய பெண்ணின் அதிர்ச்சிப் பேச்சு…!

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிர பிரச்சனைகளால் மனமுடைந்துபோன ஒரு பெண், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானாள். விரக்தியின் எல்லைக்கே சென்ற அவளுக்கு வேறு வழி எதுவுமே புலப்படவில்லை. இறுதியில், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவோடு ஓடும் ஆற்றில் குதித்தாள்.

சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர், அந்தப் பெண் ஆற்றில் குதிப்பதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தனர். யோசிக்கக்கூட நேரமின்றி, அனைவரும் அவளைக் காப்பாற்றும் நோக்கில் உடனடியாக ஒன்று திரண்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு கயிற்றின் உதவியோடு தீவிர முயற்சி செய்து, வழழியாக அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக ஆற்றிலிருந்து வெளியே மீட்டெடுத்தனர்.

   

மீட்கப்பட்ட அந்தப் பெண்ணிடம், “ஏன் இப்படி உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தாய்?” என்று பதற்றத்துடன் கேள்வி எழுப்பியபோது, அவள் சிறிதும் நன்றியுணர்வின்றி எரிச்சலுடன் பதிலளித்தாள். “என்னைக் கேட்க நீங்கள் யார்? இது என்னுடைய வாழ்க்கை- எனக்கு இஷ்டமானதை நான் செய்வேன், இதில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” என்று கூறி அனைவரையும் வாயடைக்கச் செய்தாள்.