“அவன் தான் வேணும்.. நீ வேண்டாம்..!”… கள்ளக்காதலனுடன் செல்வேன் என அடம்பிடித்த மனைவி… கணவன் செய்த விபரீத செயல்… போலீஸே மிரண்டு போன கொடூரம்!

Spread the love

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சித்தாரெட்டி, தனது மனைவி கவிதா வேறொரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்து, அவரை ஓடும் காரிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தையல் தொழில் செய்து வந்த கவிதாவுக்கு, பேஸ்புக் மூலம் திருப்பதியைச் சேர்ந்த பவன்குமார் ரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் 27-ஆம் தேதி தனது இரு குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டுவிட்டு, கவிதா தனது கள்ளக்காதலனுடன் ஜட்செர்லா பகுதிக்குச் சென்று குடியேறினார்.

மனைவியைக் காணவில்லை என சித்தாரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, கவிதா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, போலீஸ்காரர் காதிர் என்பவருடன் காரில் ஜட்செர்லா சென்ற சித்தாரெட்டி, கவிதாவை மீண்டும் குடும்பத்துடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அங்கு போலீஸார் அறிவுரை கூறியும், கள்ளக்காதலனைப் பிரிய மனமில்லாத கவிதா தனது கணவரை மிகக் கடுமையாகத் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருவழியாக போலீஸாரின் சமரசத்திற்குப் பிறகு ஜாகிராபாத்திற்கு வர கவிதா சம்மதித்த நிலையில், காரின் பின் இருக்கையில் கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய மூவரும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.

சதாசிவபேட்டை அருகே கார் நிறுத்தப்பட்டபோது, ஆத்திரத்தில் இருந்த சித்தாரெட்டி ரகசியமாகக் கத்தி ஒன்றை வாங்கி மறைத்து வைத்துள்ளார். மீண்டும் பயணம் தொடர்ந்தபோது, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார். ரத்தம் பீறிட்டு கொட்டிய நிலையில், கவிதாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவலில் இருந்த போலீஸ்காரர் முன்னிலையிலேயே நடந்த இந்த துணிகரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சித்தாரெட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

3 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

3 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

3 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

4 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

4 மணத்தியாலங்கள் ago