செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்றைய பணியிடங்களை வேகமாக மாற்றி வரும் சூழலில், அதை ஊழியர்கள் மீது கட்டாயப்படுத்துவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று Canva நிறுவனத்தின் இணை நிறுவனர் கேமரூன் ஆடம்ஸ் எச்சரிக்கிறார். நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட AI கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கும் போது, ஊழியர்களின் ஆர்வம் குறைந்து, அது மற்றொரு சுமையான வேலையாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக ஊழியர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல், குறைந்தபட்ச அளவில் மட்டுமே அதை பயன்படுத்துகிறார்கள். இதனால் AI தொழில்நுட்பத்தின் உண்மையான பலன் நிறுவனத்திற்கும் கிடைப்பதில்லை, ஊழியர்களுக்கும் கிடைப்பதில்லை.
இதற்கு மாற்றாக Canva நிறுவனம் ஊழியர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் ஒரு புதுமையான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அங்குள்ள ஊழியர்களுக்குத் தனித்தனி AI Budget வழங்கப்படுகிறது; அதைக்கொண்டு Claude, Gemini எனத் தங்களுக்குப் பிடித்தமான, தங்களின் வேலைக்குச் சூட்டாகும் எந்தவொரு AI கருவியையும் அவர்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். மேலும், AI Discovery Week என்ற சிறப்பு வாரத்தின் மூலம் ஊழியர்கள் தங்களின் வழக்கமான பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வேலைகளில் உள்ள சிக்கல்களுக்கு AI மூலம் புதிய தீர்வுகளைக் கண்டறிய முழு சுதந்திரமும் நேரமும் வழங்கப்படுகிறது. இந்த அணுகுமுறை ஊழியர்களிடம் இருக்கும் “AI நமது வேலையைப் பறித்துவிடுமா?” என்ற பயத்தைப் போக்கி, அதை ஒரு சிறந்த உதவியாளராகப் பார்க்க வைக்கிறது.
ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அவர்கள் எந்த விலையுயர்ந்த AI கருவியை வாங்குகிறார்கள் என்பதில் இல்லை, அதை ஊழியர்கள் எவ்வளவு விருப்பத்தோடு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. வடிவமைப்பு, மென்பொருள், மார்க்கெட்டிங் என ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால், அனைவரையும் ஒரே கருவிக்குள் அடைக்காமல் சுதந்திரமாகச் செயல்பட விடுவதே புத்திசாலித்தனம். “AI-யைப் பயன்படுத்து” என்று கட்டாயப்படுத்துவதை விட, அதை ஊழியர்கள் “விருப்பத்தோடு பயன்படுத்த வேண்டும்” என்ற ஆர்வத்தை உருவாக்குவதே உண்மையான தலைமைத்துவம் என்பதை Canva-வின் இந்த அணுகுமுறை உலக நிறுவனங்களுக்கு உணர்த்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…