திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவர் அபிஷேக், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அருகில் இருந்த ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரி நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் அவரது குடும்பத்தினரிடையேயும், கிராம மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நேற்று (மே 20) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மறைந்த மாணவர் அபிஷேக் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று, தான் படித்த கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவர் அபிஷேக் இன்று தங்களோடு இல்லை என்ற செய்தி, அவரது பெற்றோரையும் பள்ளி ஆசிரியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…