பிரபல நடிகரான அருண் விஜய் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முதலில் சூர்யாவை தான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் படத்தில் சூர்யா விலகிய பிறகு அருண் விஜய் நடித்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயாதேவி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அருண் விஜய் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது. வருகிற ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் பாலா படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் காட்டி வருகிறார். பொதுவாக இயக்குனர்கள் என்றால் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசும்போது மட்டும் தான் உடன் இருப்பார். மற்ற பாத்திரங்களுக்கு உதவி இயக்குனர்களிடம் இதனை பேசி முடிக்க சொல்லுங்கள் என்ற கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள்.

ஆனால் வணங்கான் படத்தில் ஹீரோயின் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறாராம். இதனால் பல வெளிநாட்டு பயணிகளை வைத்து படத்தை எடுத்தனர். வெளிநாட்டு பயணிகள் பேசுவது கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலா பட குழுவினருடன் மலேசியாவுக்கு சென்று அங்கு வைத்து டப்பிங் பணிகளை முடித்துவிட்டு வந்தாராம். வணங்கான் படம் சூப்பராக இருக்க வேண்டும் என பாலா அதிக கவனம் செலுத்தி வருகிறார்

