திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பாத்தாள்(65), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் தனது வீட்டில் தனியாக இருந்த பொழுது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியானா ஆனந்த்ராஜ் மது போதையில் வந்து கடன் கேட்டுள்ளார். சுபாத்தாள் கடன் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், அங்கிருந்த கத்தியை எடுத்து, சுபாத்தாளை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஆனந்தராஜை கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
