சீனாவின் ஹெனான் பகுதியில் உணவு டெலிவரி செய்யும் தாய் ஒருவர் சம்பவத்தன்று வழக்கம்போல பணியின்போது தன் மகனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரெனெ மழை பெய்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்த அந்த தாய் அருகிலிருந்த காவல்நிலையத்தில், காவலர்கள் பாதுகாப்பில் தனது மகனை விட்டுச்சென்றுள்ளார்.
View this post on Instagram
இதனையடுத்து காவலர்கள் மழையில் நனைந்திருந்த அந்த சிறுவனுக்கு உடைமாற்றி அவனை தூங்க வைத்துள்ளனர். உணவு செலிவரியை முடித்துவிட்டு தாய் திரும்பி வந்தவுடன், உறக்கத்திலிருந்த அக்குழந்தையை எழுப்பி காவலர்கள் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், காவலர்களின் இந்த கனிவான செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
