இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கணித ஆசிரியையாகப் பணியாற்றிய ரெபேக்கா ஜாய்ன், தனது வகுப்பில் பயின்ற இரண்டு மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில், ஒரு மாணவர் மூலம் அவர் குழந்தையைப் பெற்றெடுத்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சட்டவிரோதச் செயலுக்காகக் கடந்த 2024-ஆம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரெபேக்கா ஜாய்ன் மீது இங்கிலாந்து கல்வித் துறை மேலதிக நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, அவர் இனி வாழ்நாள் முழுவதும் ஆசிரியை பணியில் ஈடுபடக் கூடாது என நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியப் பணியின் கண்ணியத்தைச் சீர்குலைத்ததற்காக இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
