விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மோகனப்பிரியா (14), அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மோகனப்பிரியா, தனது தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு அடம் பிடித்துள்ளார்.
அப்பொழுது அவரது தாய் நாளை செய்து தருவதாக கூறியுள்ள நிலையில், மனம் உடைந்த மோகனப்பிரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக மோகனப்பிரியாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
