“காதலியை கொன்றுவிட்டு “…. கள்ளக்காதலன் செய்த விபரீதம்… போலீஸாரையே அதிரவைத்த ஓமலூர் கொலைச் சம்பவம்.. பின்னணியில் இருக்கும் ரத்தக் கண்ணீர் கதை…!!

Spread the love

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சத்யா (33), தனது கணவர் ராஜ்குமாரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஓமலூரில் உள்ள ஒரு தனியார் கடையில் பணியாற்றி வந்தபோது, அதே கடையில் மேலாளராக இருந்த சக்திவேல் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஏற்கனவே திருமணமான சக்திவேல், சத்யாவுடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சத்யா அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், சத்யாவைச் சமாதானப்படுத்த முயன்றும் தோல்வியடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், அவர் வேறு ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாவைத் தாக்க முயன்றபோது, அவரது 10 வயது மகன் கிஷாந்த் தடுத்திருக்கிறான். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சக்திவேல், சிறுவன் கிஷாந்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்ததுடன், சத்யாவையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுகாயமடைந்த சத்யா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதனிடையே, கொலை செய்த குற்ற உணர்ச்சியில் தலைமறைவாக இருந்த சக்திவேல், வெள்ளாளப்பட்டி அருகே மரத்தில் தனது பெல்ட் மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதல் தகராறில் ஒரு சிறுவன் உட்பட மூன்று உயிர்கள் பறிபோன இந்தச் சோகமான சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… அதிருப்தியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவுகள்… சிக்கலில் முதலமைச்சர் விஜய்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…

36 seconds ago

அடேங்கப்பா!.. பிரம்மாண்ட ஏற்பாடு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு செம்ம அடி.. டிராக்டரிலேயே ‘ஸ்விம்மிங் பூல்’ அமைத்து வலம் வரும் மாஸ் வாலிபர்.. வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…

7 minutes ago

“ஒரே ஒரு மேயர் சீட் ஜெயிச்சு காட்டுங்க உதயநிதி..!” – தவெக ஆதவ் அர்ஜுனா விடுத்த நேரடி சவால்..!  எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்…!!

விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…

15 minutes ago

அடேங்கப்பா!.. நம்ம ஊர் ஆளுங்க மூளையே தனி தான்.. வெறும் ஒரு ஓட்டை தட்டை வைத்து இளைஞர் செய்த மேஜிக்.. நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ..!

சமூக ஊடக உலகில் ஒவ்வொரு நாளும் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு விதமான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்று வழி…

19 minutes ago

“உலகையே உலுக்கிய இங்கிலாந்து நாடாளுமன்ற விவாதம்!.. 700 பேர் சேர்ந்து இளம்பெண்ணுக்கு செய்த கொடூரம்.. எம்பி வெளியிட்ட மரண பயங்கர தகவல்”..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச்…

26 minutes ago

ஹோட்டலில் 21 பேர் கருகி சாம்பலான கொடூரம்… இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 65 உயிர்கள் பலி.. டெல்லியில் என்ன நடக்கிறது…?

டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…

27 minutes ago