முகலாய வம்சத்தின் 5 ஆவது பேரரசராக பதவியேற்ற ஷாஜகான், தான் இளவயதில் இருந்து காதலித்து வந்த மும்தாஜ்ஜை தனது மனைவிகளுள் ஒருவராக ஆக்கிக்கொண்டார். அவரது அந்தபுரத்தில் பல மனைவிகள் இருந்தும் மும்தாஜின் மேல் அதிகளவு காதல் வைத்திருந்தார்.
ஒரு நாள் மும்தாஜ் உடல் நிலை சரியில்லாமல் இறந்துபோக ஷாஜகான் நொந்துப்போனார். கிட்டத்தட்ட பல நாட்களாக தனது அறையில் தனிமையிலேயே கழித்தார் அவர். தண்ணீர் கூட அருந்தாமல் மும்தாஜை நினைத்துக்கொண்டு ஸ்தம்பித்தபடியே இருந்தாராம். கடைசி வரை அவரால் மும்தாஜ்ஜின் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை.
தன்னுடைய காதலியின் நினைவிற்காக மிகப் பெரிய பொருட்செலவில் ஒரு நினைவிடத்தை எழுப்ப வேண்டும் என முடிவு செய்து அவர் கட்டிய நினைவிடம்தான் தாஜ் மஹால். ஷாஜகான் எப்படி தனது காதலிக்காக மிகப் பெரிய நினைவிடம் ஒன்றை கட்டினாரோ, அதே போல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதியை ஆண்ட ஒரு ராஜா தனது ஆசை மனைவிக்காக ஊருக்கே வண்ணத்தை பூசியிருக்கிறார்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதியை இரண்டாம் ராம் சிங் என்ற ராஜபுத்திர மன்னர் ஆண்டு வந்தார். 1870களில் வேல்ஸ் இளவரசர் அல்பர்ட் எட்வர்ட் என்பவர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்திற்கும் வருகை தருவதாக இருந்தது.
அவரை கவர்வதற்காக இரண்டாம் ராம் சிங் அவரை வித்தியாசமான முறையில் வரவேற்கவேண்டும் என திட்டமிட்டார். அந்த சமயத்தில் தனது ஆசை ராணிக்கு இளஞ்சிவப்பு நிறம் (பிங்க்) மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்துகொண்ட மன்னர், ஜெய்ப்பூர் முழுவதிலும் உள்ள கட்டடங்களுக்கு பிங்க் நிற வண்ணத்தை பூசச் சொல்லி கட்டளை இட்டாராம். மேலும் பிங்க் நிறம் தவிர வேறு நிறத்தை கட்டடங்களுக்கு பூசுவது விதிமீறல் எனவும் அறிவித்தாராம். அதன் பின் ஜெய்பூரில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சித் தந்தன.
இதற்காக அந்த பகுதியில் இருந்த கனோட்டா என்ற இடத்தில் அமைந்திருந்த மலையில் இருந்து கற்கள் வெட்டியெடுக்கப்பட்டன. அந்த கற்களை கரைத்து கால்சியம் ஆக்சைடு கலக்கப்பட்டதாம். அவ்வாறுதான் ஜெய்ப்பூர் “Pink City” ஆனதாக கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…
தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…
ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…