Categories: சினிமா

இளையராஜா – வைரமுத்து 36 ஆண்டுகள் பிரிவுக்கு, அந்த பாடல்தான் காரணமா..? ஒரு கைக்குட்டை இத்தனை பிரச்னை பண்ணிருச்சே?

Spread the love

இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்கள் என்றால், தேனில் ஊறவைத்த பலாச்சுளைகளை போல, தித்திக்கும். முதல் மரியாதை போன்ற படத்தின் பாடல்கள் அப்படித்தான் தித்தித்தன. ஆனால், ஒரு பாடல் பதிவின் போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில், அன்று முதல் இன்று வரை இளையராஜா இசையில் வைரமுத்துவும் எழுதுவதில்லை. வைரமுத்து வரிகளுக்கு இளையராஜாவும் இசைப்பதில்லை. கடந்த 36 ஆண்டுகளாக இவர்களது பிரிவால், அதிகம் பாதிக்கப்பட்டது, இழந்தது, கலைத்துறையில் ஏமாற்றம் அடைந்தது நல்ல இசையை விரும்பும், நல்ல கருத்தான பாடல்களை ரசிக்கும் ரசிகர்களும்தான்.

இளையராஜாவை விட்டு பிரிந்த பின், ஆறு ஆண்டுகள் சினிமா துறையில் பாடல்கள் எழுத வாய்ப்பின்றி காணாமல் போனார் வைரமுத்து. அப்போது, கே பாலசந்தருக்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட பிணக்கில் உள்ளே வந்தார் கவிஞர் வைரமுத்து.

வானமே எல்லை., ரோஜா, அண்ணாமலை என 3 படங்களுக்கும் அவரே கவிஞர். ஒரு படத்துக்கு சந்திரபோஸ், ஒரு படத்துக்கு ஏஆர் ரகுமான், ஒரு படத்துக்கு தேவா என மூன்று இசையமைப்பாளர்களுக்கும் 3 விதமான படங்களுக்கு முத்து முத்தான பாடல்களை எழுதி மீண்டும் உச்சம் தொட்டார் வைரமுத்து. தொடர்ந்து, ஹிட் பாடல்களை கொடுத்த வைரமுத்துவுக்கு குவியத் துவங்கியது வாய்ப்புகள். இளையராஜாவை விட்டு பிரிந்தும், இப்போதும் பிஸியான கவிஞர்தான் வைரமுத்து.

இசை ஜாம்பவான் இளையராஜாவுக்கும், கவிதை ஜாம்பவான் வைரமுத்துவுக்கும் இடையில் ஏற்பட்டது சிறு உரசல்கள்தான், பின்னாளில் பூகம்பமாக மாறி இருக்கிறது. ஒரு படத்தின் மொத்த பாடல்களையும் நான்தான் எழுத வேண்டும். அப்போதுதான் கேசட்டுகளில் என் பெயரும், புகைப்படமும் இடம்பெறும் என ஆசைப்பட்டார் வைரமுத்து. சில நேரங்களில் கவிஞர் வாலியை ஒரு பாடல் எழுத வைத்து, பாடல்கள் வாலி, வைரமுத்து என கேசட்டில் மாற்றி இருக்கிறார் இளையராஜா.

அதே போல், வைரமுத்துவின் பாடல் வரிகளை அடிக்கடி மாற்றி, திருத்தவும் செய்திருக்கிறார். இசைபாடும் தென்றல் என்ற படத்தில், எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது என வைரமுத்து எழுத, என்னய்யா உரைநடை மாதிரி எழுதியிருக்கே, என இளையராஜா வேறு எழுத அதில் ஏற்பட்ட மோதல்தான், இன்று வரை, இருவரையும் பிரித்தே வைத்திருக்கிறது.

admin

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

6 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

6 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

6 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

6 மணத்தியாலங்கள் ago