வீட்டிற்கு வந்த அக்கா காதலன்… தங்கை மற்றும் அவரது நண்பர்கள் செய்த வெறிச்செயல்… டெல்லியை அதிரவைத்த கொலைச் சம்பவம்..!!!

Spread the love

டெல்லியை அடுத்த ஃபரிதாபாத்தில், தனது அக்காளின் காதலனைத் தங்கை மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த 25 வயதான மனஸ் ராய் என்பவர், ரோஷன் நகர் பகுதியில் வசிக்கும் தனது காதலியைச் சந்திப்பதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு காதலியின் தந்தையுடன் மனஸ் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென வீட்டிற்கு வந்த காதலியின் தங்கை, தனது காதலன் அமன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மனஸ் ராயைத் தடுத்து நிறுத்தித் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மோதலின் போது, அந்த இளம் பெண் தனது சட்டைப்பையிலிருந்து கத்தியை எடுத்து மனஸைத் தாக்கத் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரது காதலன் அமன் என்பவர் மனஸின் வயிற்றில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். மனஸுடன் வந்திருந்த நண்பர் ஹர்ஷ் இதனைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மனஸ் ராய் உடனடியாக டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இளைஞரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஃபரிதாபாத் போலீசார் 24 மணி நேரத்திற்குள் ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரின்ஸ், ரோஷன், ராகுல் மற்றும் ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியான அமன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைக் கைது செய்த பின்னரே, அக்காளின் காதலனைக் கொலை செய்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

பகீர்..! சிறுவன் தலையைச் சுவரில் ஓங்கி அடித்து கொலை… குருகுலத்தில் நடந்த கொடூரம்… காதலியுடன் சேர்ந்து உரிமையாளர் செய்த பகீர் காரியம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…

44 minutes ago

அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…

53 minutes ago

நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…

1 மணத்தியாலம் ago

பக்தர்கள் கோமியத்தைக் குடிப்பது கட்டாயமா..? கங்கோத்ரி கோயில் பெயரில் பரவும் அதிரடி வதந்தி.. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…

1 மணத்தியாலம் ago

தலைகீழான உலகம்..! பாம்பின் தலையைத் தின்னும் நண்டு… இணையத்தை அதிரவைக்கும் ‘பகீர்’ வீடியோ! இயற்கையின் விசித்திர வேட்டை..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …

1 மணத்தியாலம் ago

“ஜிம்முக்கு போ.. பாய்ஃப்ரெண்ட் இருக்கா? – TCS அலுவலகத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர் கிளப்பும் வாக்குமூலம்..!!

டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…

1 மணத்தியாலம் ago