ச்சீ கேவலமா இல்லையா..? உயிரே போனாலும் பரவாயில்லை… பயணியிடம் திருடிய டாலர்களை விழுங்கிய பாதுகாப்பு அதிகாரி… விமான நிலைய சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி…!!

By Soundarya on தை 31, 2026

Spread the love

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா சர்வதேச விமான நிலையத்தில் (Ninoy Aquino International Airport), பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பயணியின் பணத்தைத் திருடி, அதை மறைக்க விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்புச் சோதனையின் போது (Security Screening), ஒரு பயணியின் பையில் இருந்த 300 அமெரிக்க டாலர்களை (சுமார் ₹25,000) அந்த பெண் பாதுகாப்பு அதிகாரி திருடியுள்ளார். இது குறித்து அந்தப் பயணி அதிகாரிகளிடம் புகார் அளித்ததை அடுத்து, பிடிபடுவதைத் தவிர்க்க அந்த அதிகாரி பணத்தை மடித்து வாயில் போட்டு விழுங்க முயன்றார்.

இருப்பினும், அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த அதிகாரி பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்குவதும், அதற்கு உதவியாகத் தண்ணீரைப் பருகுவதும் மிகத்தெளிவாகப் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அந்த அதிகாரி உட்பட இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற ஊழியர்களும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.