“விஜய்க்கு வக்கில்லை.. கட்சி நிர்வாகிகளுக்கும் வக்கில்லை!”… ஆதவ் அர்ஜுனாவை கிழித்து தொங்கவிட்ட சாட்டை… சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!

Spread the love

தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அக்கட்சியின் தேர்தல் பரப்புரைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தவெக தலைவர் விஜய் நேரடியாகப் பங்கேற்காத போதிலும், வேட்பாளர் நேர்காணல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தவெக மாநிலத் துணைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்துள்ளார். “சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இருமொழிக் கொள்கை குறித்து விவாதிக்க உங்கள் குடும்ப தொலைக்காட்சிக்கே நான் வரத் தயார்” என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு விவாதத்தில் தான் தோற்றுவிட்டால் அரசியலை விட்டே விலகிவிடுவதாகவும் ஆவேசமாகப் பேசினார். தவெகவுக்கு கொள்கை இல்லை என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அவரது இந்தப் பேச்சு அமைந்திருந்தது.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த சவாலுக்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். “முதலில் தேர்தலில் வென்று சட்டமன்றத்திற்கு வாருங்கள், அதன் பிறகு விவாதிக்கலாம்” என அவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் முதன்மைப் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதில், தனது கட்சியின் தலைவருக்கே பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் துணிச்சல் இல்லாத நிலையில், ஊடக விவாதங்களில் பங்கேற்கத் தெரியாத கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றவர்களை விவாதத்திற்கு அழைப்பது வேடிக்கையாக இருப்பதாகச் சாடியுள்ளார். மேலும், “உங்களை விவாதம் செய்வதற்கு உங்கள் மச்சான் அழைக்கிறார், அங்கு போய் வாருங்கள்” எனத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பதிவிட்டுள்ள அந்த வாசகங்கள், தற்போது தவெக மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்களிடையே இணையதளப் போரை மூட்டியுள்ளதோடு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Muthu Mani

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

2 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago