சந்தௌலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ், பக்தி என்ற பெயரில் தீக்குள் தலையை வைத்துச் சாமியாடும் விபரீத செயலில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்த வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திகுதிகுவென எரியும் நெருப்புக்கு நடுவே தனது தலையை முழுமையாக வைத்து அவர் சடங்கு செய்யும் காட்சிகள் பார்ப்போரைப் பதற வைக்கின்றன.
“What kind of bhakti is this?” 😱
“This is just scary and dangerous.” 👹
The priest’s name is Mulayam Singh Yadav from Chandauli, UP. Faith is a personal choice, but this actions need serious questioning. pic.twitter.com/ekqYm5Lddn
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) January 7, 2026
மத நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை என்றாலும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய மூடநம்பிக்கைச் செயல்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. ஒருவரின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய ஆபத்தான சடங்குகள் “பக்தி” என்ற பெயரில் நியாயப்படுத்தப்படக் கூடாது என்றும், பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
