தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை தற்போது மாற்றப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவும் செய்தி திமுக கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. சமீபகாலமாகவே மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை தீவிரமாக முன்வைத்து வருவது திமுக தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது.
இப்படியான நிலையில் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக இருக்கும் மாணிக்கம் தாகூர் தலைவரானால் திமுக மற்றும் காங்கிரஸ் உறவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகளை சரி செய்வதற்காக மேலிடம் இந்த மாற்றத்தை திட்டமிடுவதாக தெரிகிறது.. இருந்தாலும் செல்வபெருந்தகையை பதவியில் இருந்து நீக்கினால் அது சமூக ரீதியிலான விவாதங்களை உருவாக்கும் என்பதால் காங்கிரஸ் மேலிடம் மிகவும் கவனமாக ஆலோசித்து வருகிறது. இந்த தலைமை மாற்றம் உறுதியானால் வருகின்ற பொங்கலுக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியாகும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.
