இந்தியாவில் வெங்காயத்தின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது. அத்தியாவசிய காய்கறிகளை மலிவு விலையில் வழங்கும் வகையில் தில்லி, மும்பை மற்றும் ஆமதாபாத்தில் கிலோ 24 வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. நடமாடும் வெங்காய விற்பனை வாகனத்தை தில்லியில் உள்ள மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறைஅமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கொடியாசித்து தொடங்கி வைத்துள்ளார். கிலோ 30 க்கு மேல் விற்கப்படும் இடங்களில் வெங்காயம் கிலோ 24 விற்கப்படும். சென்னை, குவாஹாட்டி, மற்றும் கொல்கத்தாவில் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் வரை மானிய விலையில் வெங்காயம் விற்பனையாகும். (பிஎஸ்எஃப்) திட்டத்தின் கீழ், 2024-25 ஆம் ஆண்டில் சராசரியாக கிலோவுக்கு ரூ. 15 விலையில் கொள்முதல் செய்து 3 லட்சம் டன் வெங்காயத்தை அரசிடம் கூடுதல் இருப்பதாக உள்ளது.
உணவு பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் நிலையான விலை நிர்வாகத்தை பராமரிப்பதற்காகவும் அரசின் முயற்சியாக தெரிகிறது. ஜூலை மாதத்திற்கான பொதுச் சில்லறை பணவீக்கம் 1.55 சதவீதமாக இருந்தது. தற்போதைய எட்டு ஆண்டுகளில் மிகக் குறைவானதாகும். வெங்காய ஏற்றுமதிக்கு வரி மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. மேலும் ஏற்றுமதியின் வேகம் சீராக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 1.03 லட்சம் டன் மற்றும் ஆகஸ்டில் 1.09 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி ஆகியுள்ளது . தில்லியில் 17 நடமாடும் வாகனம் செயல்படுத்தி வருகிறது. ராபி குளிர்கால பருவத்தில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம், முக்கிய உற்பத்தி மாநிலங்களான மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து உபரி இருப்பதாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல் ஆகஸ்ட் முதல் தில்லியில் மானிய விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது தக்காளியின் விலை கிலோவுக்கு ₹30க்கு விற்பனை ஆகிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…