உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிலிப்பீட்டை சேர்ந்த சிவம் மற்றும் சங்கீதா கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்கள் அமைதியாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் ஒரு சமோசா வாங்காததை காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். சங்கீதா தன் கணவரிடம் சூடான சமோசா வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணம் தவறி விழுந்ததால் சிவம் சமோசா வாங்காமல் வீடு திரும்பியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சங்கீதா முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பிறகு தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து கணவனையும் அவருடைய குடும்பத்தினரையும் தாக்கியுள்ளார். சண்டையின்போது சங்கீதாவின் உறவினர்கள் பெல்ட் மற்றும் கட்டை கொண்டு சிவத்தையும் அவருடைய குடும்பத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த சிவத்தின் மைத்துனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…