நம் முன்னோர்கள் காலத்தில் எல்லோரும் நன்றாக வளமாக இருந்தார்கள். இயற்கையும் ஆரோக்கியமாக இருந்தது. வீட்டில் தயாரிக்கப்பட்ட சுத்தமான ஆரோக்கியமான உணவுகளையே உண்டார்கள். அதனால் நோய்களும் குறைவாகவே இருந்தது. தற்போது போல் மாட மாளிகை இல்லாமல் சிறிய வீட்டிலேயே திருப்தியாக இருந்தார்கள். அதிக மரங்களை வளர்த்தார்கள். ஆனால் இன்றைய நிலைமையை பார்க்கும்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

உணவு பழக்கவழக்கங்கள் மாறிப்போனதால் பல வகையான நோய்கள் இளம் வயது மரணங்கள் ஏற்படுகின்றன. இயற்கையான மரங்களை வெட்டி அந்த இடங்களில் வீடு கட்டுவதால் இயற்கையும் சீரழிந்து பலவித பேரிடர்களை ஏற்படுத்துகிறது. இந்த காலநிலை மாற்றங்கள் மனிதனின் வாழ்க்கை முறை மாற்றத்தினால் குழந்தை பிறப்பு கூட பாதிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பு விகிதம் என்னவென்று சொல்லத் தேவையில்லை. நம் அம்மா அப்பா காலத்தில் வீட்டிற்கு மூன்று நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கொள்கையை கிராமப்புறங்களில் பரப்பி இரண்டு குழந்தைகள் பெற்று விட்டால் ஃபேமிலி ப்ளானிங் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
ஆனால் இப்பொழுதோ ஒரு குழந்தை கிடைக்காதா என்று இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் பலர். வீதிக்கு வீதி கருத்தரிப்பு மையங்கள் தான் பெருகிக் கொண்டே இருக்கின்றது. இயற்கையாக குழந்தை பெறுவது என்பதே மிக கடினமாகிவிட்டது. இதற்கு காரணம் நம் ஏற்படுத்திய வாழ்க்கை முறை மாற்றங்கள் தான். ஆனால் இந்த பிறப்பு விகிதம் குழந்தை பேறு எந்த அளவுக்கு குறைந்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் சமீபத்திய தரவுப்படி 1950 களில் 5.9 ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 2023 இல் 2.0 ஆக குறைந்து இருக்கிறது. தாமதமான திருமணம் வயது கடந்த பிறகு கருவுற முயற்சிப்பது போன்ற காரணிகளால் இது போன்று நடந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது மட்டும் அல்லாமல் நாம் ஏற்படுத்திய வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த கருவுறுதல் வீதம் குறைந்ததற்கு பெரும் பங்கு வைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
