“விஷம் கொடுத்துட்டு நடிக்கிறாங்க…”பெண் விஏஓ அருணாவின் மர்ம மரணம்…! காதலனின் பரபரப்பு புகார்…!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக விஏஓ சிவபாரதியைக் காதலித்ததால், அவரது குடும்பத்தினரே அவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது வருமானத்தில் குடும்பத்திற்காகக் கடன் வாங்கி வீடு கட்டிக் கொடுத்த நிலையிலும், சாதியைக் காரணம் காட்டி அருணாவை அவரது சகோதரர்கள் கடுமையாகத் தாக்கியதாகவும், கட்டாயப்படுத்தி வாயில் விஷத்தை ஊற்றியதாகவும் காதலர் சிவபாரதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக அருணா தனது காதலனுடன் பேசிய உருக்கமான ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தன்னைத் தேடி வந்து வெட்டுவதாக மிரட்டுவதாகவும், தான் இல்லையென்றால் காதலனின் நிலை என்னவாகும் என அஞ்சுவதாகவும் அவர் கதறியுள்ளார்.

மேலும், தனக்கு வீட்டில் விஷம் கொடுத்துவிட்டதாக அவர் அனுப்பிய குறுஞ்செய்தியும் தற்போது ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அருணாவின் அண்ணன் காவலராக இருப்பதால் வழக்குப்பதிவு செய்யத் தாமதமாவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

FLASH: கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்…

2 minutes ago

BREAKING: உலகத் தரம் வாய்ந்த ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ உருவாக்கப்படும்… வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தலைநகர் சென்னையில் உலகத் தரம்…

14 minutes ago

BREAKING: ரூ.1,200 கோடியில் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகம்… சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மெகா அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும்…

22 minutes ago

“வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல…” பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பெண் பேராசிரியர்… ஐஐடி மும்பையில் அரங்கேறிய அசத்தல் நிகழ்வு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…

34 minutes ago

“சௌமியா மேடம் கொஞ்சம் தர்மபுரியை விட்டு வெளியே வாங்க…” அமைச்சரின் கலகல பேச்சு… சட்டப்பேரவையில் எழுந்த அதிரடி சிரிப்பலை…!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…

41 minutes ago