ஆடைகள் இல்லாமல் கிடந்த சடலம்…! “கழுத்தறுக்கப்பட்டு, உடல் முழுக்க காயங்களுடன்…” மகேஸ்வரியின் கோலத்தை கண்டு ஆடிப்போன போலீஸ்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 19, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் மணிமண்டபம் பகுதியில், நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகளின்றி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த கிளியனூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பதும், அவர் தற்போது தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்ததும் தெரியவந்தது. அவரது முகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் கடுமையான காயங்கள் இருந்ததால், இது திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது உறுதியானது.

தற்போது மகேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலையாளி யார் என்பது குறித்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னையில் இருந்து திண்டிவனம் பகுதிக்கு அந்தப் பெண் எப்படி அழைத்து வரப்பட்டார் என்பது குறித்தும், அந்தப் பாதையில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.