Connect with us

CINEMA

Press Meet-ல் திடீரென குறுக்கிட்டு உயிரை காப்பற்ற சொல்லி கதறிய பாட்டி.. நடிகர் அருண்விஜய் செய்த செயல் (வீடியோ)..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இதைத்தொடர்ந்து எண்ணற்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். 2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார்.

   

இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய். தற்பொழுது இவர் வணங்கான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நடிகர் அருண் விஜய் ஆர்த்தி என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது புர்வீ என்ற ஒரு மகளும், அர்ணவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடிகர் அருண் விஜய் தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடினார். தன் பிறந்தநாளை உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார்.  ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடிய அருண் விஜய், அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார்.

அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் ரத்த தானம் செய்தார்.நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக இங்கு வந்து கலந்துகொண்டனர். அப்பொழுது அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென தாய் ஒருவர், தனது மகன் ஐசியூவில் இருப்பதாகவும், தனக்கு உதவும்படியும் கேட்டு கொண்டார். உடனே அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி தனது உதவியாளரிடம் அவர் கூறினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top