முக்குலத்தோர் வாக்குகள் மாறுமா?… “நிதின் நபின் + சரத்குமார் = 50 பேர் தான்.. சாத்தூரில் நயினார் வாங்கிய ‘மெகா’ காத்து”… பாஜக-வை கதறவிட்ட பொதுமக்கள்…!!!

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் நெல்லை தொகுதியை விட்டுவிட்டு சாத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆறு மாதங்களாகத் தனது மகன்களைக் களமிறக்கி தேர்தல் பணிகளைச் செய்து வந்த நயினார் நாகேந்திரன், முக்குலத்தோர் சமூக வாக்குகளைப் பெரிதும் நம்பியுள்ளார். இதற்காக நெல்லையிலிருந்து 10-க்கும் மேற்பட்ட சிறப்புக் குழுக்களை வரவழைத்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாலும், ‘வெளியூர்க்காரர்’ என்ற முத்திரை சாத்தூர் மக்களிடையே அவர் மீதான விமர்சனத்தைக் குறைக்கவில்லை.

சாத்தூர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நயினார் நாகேந்திரன் பிரம்மாண்டமான ‘ரோடு ஷோ’ ஒன்றை நடத்தினார். இருப்பினும், இந்தப் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் யாரும் அவர்களைப் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்கள் உற்சாகமாக வணக்கம் செலுத்திச் சென்றாலும், அங்கிருந்த மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளை இயல்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்களே தவிர, பாஜகவின் அணிவகுப்பைப் பெரிதாகச் சட்டை செய்யவில்லை.

நயினார் நாகேந்திரன் போன்ற ஒரு ‘பவர் சென்டர்’ தலைவர் வீதியில் இறங்கிப் பிரச்சாரம் செய்தபோதும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 50 பேரைத் தவிர வேறு பொதுமக்களின் பங்களிப்பு அங்குத் தென்படவில்லை. பாஜகவின் தேசியத் தலைவரே முன்னின்றும் மக்கள் காட்டிய இந்த அலட்சியம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தேசிய அளவில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிமுகவின் ஆதரவு இருந்தபோதிலும், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவது சவாலான காரியம் என்பதை இந்தச் சூழல் உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Muthu Mani

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago