“காட்டுக்குள் உல்லாசம் இருக்கலாம் வா” காதலியை அழைத்த காதலன்… மறுத்த அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி… ஆடிப்போன திருவள்ளூர்..!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதம் (30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல நவநீதம் தனது கால்நடைகளை மேய்ப்பதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த சுகுமார், நவநீதத்தை தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அந்தச் சமயத்தில் மதுபோதையில் இருந்த சுகுமார், நவநீதத்தை உல்லாசத்திற்கு வருமாறு வற்புறுத்தி அழைத்துள்ளார். ஆனால், பொது இடத்தில் இதற்கு நவநீதம் உடன்பட மறுத்ததோடு, சுகுமாரின் செய்கையைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சுகுமார், ஆத்திரமடைந்து நவநீதத்தின் கழுத்தை பலமாக நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நவநீதம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி காவல்துறையினர், நவநீதத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற சுகுமாரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது சுகுமாரைக் கைது செய்துள்ள போலீசார், இது குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

25 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago