#image_title
நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபு, உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
கோட் படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த விஜயை சந்திப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். உடனே நடிகர் விஜய் பேருந்து மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரளா ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசினார்.
அவர் பேசியதாவது, சேச்சி, சேட்டன்மார்.. ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு உங்களின் முகத்தை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நண்பா நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல் என மலையாளத்தில் பேசி அசத்தினார்.
கடந்த சில நாட்களாக படத்தின் ஷூட்டிங் எங்கு நடந்தாலும் தளபதி விஜய் ரசிகர்களை புறக்கணிக்காமல் அவர்களுடன் நின்று பேசுவது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் தனது கையில் தூக்கி வைத்திருக்கும் ஒரு குட்டி குழந்தை அவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…
தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…
வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…