Connect with us

CINEMA

“அஜித்” அரசியலுக்கு வரவழைக்க நினைத்தாரா “ஜெயலலிதா”.. நேரில் பார்த்து அஜித்திடம் சொன்னதென்ன?..

தமிழ் சினிமாவின் செல்லக் குழந்தையாக வலம் வரும் ஒரு நடிகர் தான் “அஜித் குமார்”. அதன் பின்னதாக சினிமாவில் “அல்டிமேட்” ஆக வலம் வந்த அஜித் குமார், அதற்குப் பிறகு “தல அஜித்” மாரி சினிமா துறையில் மாபெரும் மாஸ் ஹீரோவாக இருந்து வந்தார், ஆனால் தற்போது அவர் தான் ரசிகர்களிடம் தாழ்மையுடன் கூறிக் கேட்டுள்ளார், தன்னை யாரும் “தல” என்று அழைக்க வேண்டாம், என்னுடைய பெயர் “அஜித்குமார்” ஆகும், ஆதலால் என்னுடைய பெயரை அஜித்குமார் என்று நீங்கள் கூறலாம் என்று மிகப் அன்புடன் கேட்டுக் கொண்டார். இவருக்கு பொதுவாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிடிக்காது,

இவர் எப்பொழுதும் அவர் வேலை மட்டுமே பார்ப்பார், படத்தின் ப்ரோமோஷன், ஆடியோ லான்ச் எதற்குமே தலையிட மாட்டார், வந்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார் தவிர எந்த கலை நிகழ்ச்சியும் துக்க நிகழ்ச்சியும் எதற்கும் கலந்து கொள்ள மாட்டார், முக்கியமாக அரசியலில் இவருக்கு துளியும் விருப்பமில்லை, இது இவர் தனி உலகத்தில் வாழ்ந்து வரும் ஒருவர் என்றே கூறலாம். ஆனால் ஒரு மாபெரும் அரசியல் கிங்கா இருந்த முன்னாள் முதலமைச்சர் ஒருவர் அஜித் அவர்களை தன் அரசியல் களத்தில் வைத்துக்கொள்ள மிக ஆசைப்பட்டார் ஆனால் அதற்கு அஜித் மறுப்பு தெரிவித்து விட்டார்.

   

நடிகையாக இருந்து அதன் பின் எம்.ஜி.ஆர் உடன் களத்தில் இறங்கி தனியாக கோட்டையைப் பிடித்து அயன் லேடி ஆக வலம் வந்து இந்தியா அரசியல் ஆளுமைகளை நடு நடுங்க வைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் “ஜெயலலிதா” அவர்கள் அஜித் அவர்களை தன் கட்சியில் தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார் என்று பலர் பத்திரிகையாளர்கள் இதனை தெரிவித்து இருந்தார்கள், ஜெயலலிதா அவர்கள் தனக்கு பின்னால் அஜித் அவர்களை தமிழக முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று அவருக்கு எண்ணம் இருந்தது அதற்காக அஜித்திடம் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துள்ளார்,

ஆனால் அஜித் அவர்களுக்கு இதுவரையிலும் அரசியலில் துளி கூட விருப்பம் இல்லாததால் அவர் அதற்கு உண்டான விஷயங்களில் ஈடுபடாமலே இருந்து விட்டார். ஜெயலலிதா அவர்கள் அஜித்தின் மேல் எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்றால், அஜித்தின் நண்பரான மறைந்த “வெற்றி துரைசாமி” அவர்களின் திருமணத்திற்கு ஜெயலலிதா அவர்கள் சென்று கொண்டிருந்த பொழுது அஜித்தை பார்த்தவுடன் யோசிக்காமல் காரை விட்டு இறங்கி அஜித்திடம் நலம் விசாரித்துள்ளார். இதுவரை யாரிடமும் இப்படி ஜெயலலிதா நடந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top