சிங்கப்பூரில் வசித்து வரும் நபர் ஒருவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மனைவி இரு குழந்தைகளுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே இளைய மகனின் பிறந்த நாள் வருகின்ற 23ஆம் தேதி வருவதால் மகனின் அப்பா இந்தியா வந்துள்ளார். தன்னுடன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று குழந்தைகளை ஒப்படைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் என்ற நீதிபதிகளிடம் விசாரணைக்கு வந்துள்ளது.
காணொளி காட்சி மூலம் அப்பெண் கோட்டில் ஆஜரானார். விசாரணை ஆரம்பித்தது கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். எனக்கு கணவனுடன் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க விருப்பமில்லை என்றும் எனக்கு ஜீவனாம்சம் கூட அளிக்கவில்லை என்று கூறினார். நீதிபதி, நீங்கள் உங்கள் கணவனோடு வாழ்வதற்கு என்ன பிரச்சனை? என்று கேட்டார். அப்பெண்:என் கணவனின் செயல்பாடுகள் சரியில்லை, சிங்கப்பூரில் வாழ்வதற்கு மிகவும் கடினம் வாழ வேண்டும் என்றால் வேலை தேவை என்று கூறினார். நீதிபதிகள்: வேலை இருக்கிறதோ இல்லையோ வேலைக்கு செல்கிறாரோ இல்லையோ ஆனால் நீங்கள் அவருடன் சென்றால் அவர் உங்களுக்கு தேவையானதையும் உங்களின் குழந்தைகளுக்கு தேவையானதையும் மற்றும் பணம் டெபாசிட் செய்யுமாறு கணவனிடம் கேட்கலாம் என்று கூறினர்.
ஆனால் அப்பெண்ணோ நான் யாரையும் சார்ந்து இருக்க விரும்பவில்லை என்று கூறினார். அப்போது நீதிபதிகள் அப்பெண்ணிற்கு அறிவுரை கூறினர், எங்களை பழைய புராணம் பாடுகிறார்கள் என்று நினைத்தாலும் கூட பரவாயில்லை ஆனால் திருமண உறவு நீடிக்கும் வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவருமே ஒருவரை சார்ந்து ஒருவர் இருந்து தான் ஆக வேண்டும் யாராவது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் எதற்கு அவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று அறிவுரை சொன்னார்.
திருமணம் என்பது இருவரும் ஒருவராக மாறி செயல்படுவது , பிறகு எப்படி நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். குழந்தைகளுக்காகவாது சிந்தித்து இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. குழந்தைகள் அழகான குடும்பத்தையே பார்க்க வேண்டும். உடைந்த குடும்பத்தை அல்ல அவர்கள் என்ன செய்தார்கள் ஏன் அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு அந்தப் பெண் சிந்திப்பதாக தெரிவித்தார்.
