சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற கணவன், வீட்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து பால்கனி வழியாக தெருவில் வீசத் தொடங்கினார். சுமார் 25,00,000 ரூபாய் (2,10,000 யுவான்) மதிப்பிலான நோட்டுகள் வானத்திலிருந்து மழை போல கீழே கொட்டியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தெருவில் ப
ணம் சிதறி கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து பணத்தைச் சேகரிக்கத் தொடங்கினர். சிலர் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட முயன்றாலும், அங்கிருந்த மற்றவர்கள் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிதறிக் கிடந்த பணத்தைப் பாதுகாப்பாக மீட்டனர். அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்களின்The husband who threw money The husband who threw moneyஉதவியுடன் சுமார் 18,00,000 ரூபாய் வரை மீட்கப்பட்டு அந்த தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய ஒரு பகுதி பணம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. உணர்ச்சிவசப்பட்டு தம்பதியினர் செய்த இந்த வினோதமான செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…