நீலகிரி மாவட்டம் குன்னூரில், பள்ளி மாணவிகள் 5 பேரைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உமேஸ்வரனுக்கு ஊட்டி மகிளா நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. வேட்டை தடுப்பு காவலராகவும் பணியாற்றிய இவர், தனது பெட்டிக்கடைக்கு வரும் 8 மற்றும் 10-ம் வகுப்பு சிறுமிகளைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே திருமணமான உண்மையை மறைத்து, ஒவ்வொரு சிறுமியிடமும் தனித்தனியாகக் காதல் நாடகமாடிச் சீரழித்த இவனது கொடூரச் செயல் கடந்த ஆண்டு புகாரின் மூலம் அம்பலமானது.
இந்த வழக்கை மிக விரைவாக விசாரித்த குன்னூர் மகளிர் போலீஸார், ஓராண்டிற்குள் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுமிக்கும் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரம் மற்றும் பொறுப்பான பதவியில் இருப்பவர்களே இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபட்டால் சட்டம் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…