“2 மனைவி, 7 குழந்தைகள்” 3-ஆவது கர்ப்பமாக இருக்கும்போது 4-வது காதலி… செல்போனால் சிக்கிய “22 வயது காதல் மன்னன்” செய்த கொடூரம்…!!

Spread the love

பஞ்சாபில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சிந்து ரிஷிதேவ் என்பவர், தன்னுடன் பணியாற்றிய கைலாஷ் என்பவரின் மகள் மஞ்சு குமாரியை காதலித்துத் திருமணம் செய்துள்ளார். சிந்துவை ஒரு நல்ல இளைஞன் என நம்பிய கைலாஷ், தனது மகளை அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் அனைவரும் சமீபத்தில்தான் சொந்த ஊரான பூர்ணியாவிற்குத் திரும்பியுள்ளனர். இருப்பினும், தனது கணவரின் பின்னணி குறித்து மஞ்சு குுமாரிக்குத் தெரிய வந்தபோதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

விசாரணையில், சிந்து ரிஷிதேவ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்தவர் என்பதும், அவருக்கு இரண்டு மனைவிகள் மூலம் மொத்தம் ஏழு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. தற்போது மஞ்சு குுமாரி அவரது மூன்றாவது மனைவியாகவும், நான்கு மாத கர்ப்பிணியாகவும் இருக்கும் நிலையில், சிந்து நான்காவது பெண்ணுடன் காதல் தொடர்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். சிந்துவின் செல்போனில் பல பெண்களின் எண்கள் இருந்ததும், அவர் அவர்களுடன் அடிக்கடி பேசி வந்ததும் மஞ்சுவிற்குத் தெரியவந்தது. இதனை மஞ்சு தட்டிக்கேட்டதால் குடும்பத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது கணவருடன் பஜாரிற்குச் சென்ற மஞ்சு குமாரி, அதன் பிறகு மர்மமான முறையில் காணாமல் போனார். மகளைத் தேடி அவரது பெற்றோர் மாமியார் வீட்டிற்குச் சென்றபோது, அங்குள்ளவர்கள் முறையான பதில் அளிக்காமல் இருந்ததால் சந்தேகம் வலுத்தது. இந்தச் சூழலில், மறுநாள் கிராமத்தில் உள்ள மூங்கில் தோப்பு ஒன்றில் மஞ்சு குமாரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் இலைகள் மற்றும் புதர்களால் மறைக்கப்பட்ட நிலையில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த அக்பர்பூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மஞ்சு குமாரி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது கணவனின் பல திருமணங்கள் மற்றும் கள்ளத்தொடர்புகளைக் கண்டுபிடித்துத் தட்டிக்கேட்டதால், சிந்து ரிஷிதேவ் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்ததாகப் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள சிந்து ரிஷிதேவ் மற்றும் அவரது உறவினர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

13 minutes ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

18 minutes ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

22 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

27 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

31 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

32 minutes ago