“4 பிள்ளைகளின் நிலை என்ன…?” போதையில் மனைவியை கொன்ற கணவர்… கண்விழித்து அதிர்ச்சியில் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

Spread the love

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருக்கம்பாடி ஆதிவாசி காலனியைச் சேர்ந்த கேசவன் மற்றும் அவரது மனைவி மாதி ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்கள். இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த கேசவன் மனைவியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி இறந்தது தெரியாமல் போதை மயக்கத்தில் அவர் அருகிலேயே உறங்கிய கேசவன், மறுநாள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மாதி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் செய்த செயலால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் நிலைகுலைந்த அவர், தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த சேரம்பாடி போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப்பழக்கத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தகுதி நீக்கம்..? கவிழப்போகும் தவெக ஆட்சி…? அரசியலில் பெரும் பரபரப்பு..!!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக, அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள்…

2 minutes ago

காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்…. CM விஜய்க்கு துரை வைகோ திடீர் ஆதரவு… அதிரடி திருப்பம்…!

விஜய்யின் அரசியல் வெற்றியை நாம் சிறுமைப்படுத்தக் கூடாது என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச்…

10 minutes ago

FLASH NEWS: ஜப்பானில் அதிகாலையிலேயே பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை… அதிர்ச்சி தகவல்….!

ஜப்பானின் ககோஷிமா (Kagoshima) பகுதியில் இன்று காலை சுமார் 8 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக ஒரு அதிபயங்கர…

13 minutes ago

புதிய ரேஷன் கார்டுகள்.. தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… காலையிலேயே வெளியான அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்துள்ள மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கவுள்ளது. புதிய ரேஷன்…

16 minutes ago

BREAKING: நள்ளிரவில் அதிரடி கைது.. CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்…!!!

சென்னையில் ரவுடிகளின் அத்துமீறல்களை ஒடுக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில் காவல்துறை நடத்திய அதிரடி 'ஸ்பெஷல் டிரைவ்…

44 minutes ago

தமிழ்நாட்டுக்கு வந்த ‘2’ பெரிய அடியா?.. முதலீட்டாளர்களின் சொர்க்கம் இனி வெறும் கனவு தான்… அண்டை மாநிலங்களைப் பார்த்து வியக்கும் தமிழகம்..!!

தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி தற்போது கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்களின் சொர்க்கமாகத் திகழ்ந்த தமிழகத்தில் இருந்து ₹15,000 கோடி…

50 minutes ago