அடப்பாவி..! வாடகை வீட்ல இதையா பண்ணுவ?… சுவிட்ச் பாக்ஸில் சீக்ரெட் கேமரா… வசமாக சிக்கிய ஓனர் மகன்…!!

By Gayathri on ஆவணி 26, 2026

Spread the love

சென்னை வானகரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் செல்லும் பெண்களின் அறையில், மின் இணைப்பு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிநவீன ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக அந்த பெட்டி இருப்பதை சந்தேகித்த பெண்கள், அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே கேமரா இருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்தனர். தங்களது பாதுகாப்பிற்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தல் குறித்து உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டின் உரிமையாளரது மகனான சரவணன் என்பவரே இந்த இழிவான செயலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். வாடகைதாரர்கள் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அவர் இந்த கேமராவைப் பொருத்தியதும், அதனை தனது கைபேசியுடன் இணைத்து பெண்களின் தனிப்பட்ட தருணங்களை நேரலையாகக் கண்காணித்து வந்ததும் அம்பலமானது. இதனையடுத்து குற்றவாளியைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்து விசாரித்து வருவதுடன், தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.