பிரபல நடிகை தீபாவின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… டீக்கடையில் நின்றிருந்தபோது பாய்ந்த அரிவாள்.. பின்னணி என்ன?.. பதறும் தூத்துக்குடி..!!

Spread the love

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘டாக்டர்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற துணை நடிகை தீபாவின் தந்தை புலவர் கணேசன் (70). தூத்துக்குடி மாநகர் 57-வது வார்டு காங்கிரஸ் தலைவராகவும், முத்தையாபுரம் பத்ரகாளி அம்மன் கோயில் தர்மகர்த்தாவாகவும் இருக்கும் இவர், நேற்று முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், முன்விரோதம் காரணமாக புலவர் கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனைத் தடுக்க முயன்ற அருகிலிருந்த மற்றொரு நபருக்கும் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.

புலவர் கணேசன் பத்ரகாளி அம்மன் கோயில் அருகே காமராஜர் சிலை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். கோயில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைக்கும் விவகாரத்தில், அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறின் உச்சக்கட்டமாகவே நேற்று அவர் மீது இந்த பயங்கர கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது காயமடைந்த புலவர் கணேசன் மற்றும் தடுக்க முயன்ற நபர் ஆகிய இருவருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், முத்தையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த பொன்ராஜ் (25), இசக்கி (22) மற்றும் கார்த்தி ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

7 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

8 மணத்தியாலங்கள் ago