மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (30) என்பவருக்கும், பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த முத்து (25) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, துளசி (5) என்ற பெண் குழந்தை இருந்தது. தற்போது கோடை விடுமுறை என்பதால், முத்து தன் மகளுடன் பெத்தானியாபுரத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு கணவர் சுந்தரபாண்டி மனைவியை அழைக்க வந்தபோது, பள்ளி திறக்க இன்னும் சில நாட்கள் இருப்பதால் வர மறுத்து முத்து அங்கேயே தங்கியுள்ளார். இதன் காரணமாக, கணவர் அழைத்ததால் வீட்டிற்குச் செல்லும்படி முத்துவின் தாய் அவரை அறிவுறுத்தியுள்ளார்.
தாயின் அறிவுரையால் முத்துவுக்கு அவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, யாரிடமும் பேசாமல் கடுமையான மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து தற்கொலை செய்ய முடிவெடுத்து, முதலில் தன் மகள் துளசியின் கழுத்தைக் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், அதே அறையில் தானும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த முத்துவின் தாய் வீடு திரும்பியபோது, பேத்தி கொலைப்பட்டுக் கிடப்பதையும், மகள் தூக்கில் பிணமாகத் தொங்குவதையும் கண்டு அதிர்ச்சியில் கதறியழுதார். தகவலறிந்து வந்த கரிமேடு போலீசார் இரு உடல்களையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…