ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ‘பசங்க’ பட ஹீரோ…!!! லேட்டஸ்ட் கிளிக்..!!!

By Begam

Published on:

பாண்டிராஜன் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை  அடைந்தது. இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

   

இந்த படத்தில் ‘அன்பு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள  நடிகர் கிஷோர் இப்பொழுது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த நடிகர் கிஷோருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

மேலும் சிறந்த தமிழ் படத்திற்கான விருது, சிறந்த திரைக்கதைக்கான விருது ‘பசங்க’ படத்திற்கு கிடைத்துள்ளது. இப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழக அரசின் மாநில விருது வழங்கும் விழா நடுவில் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

இப்பொழுது சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த அந்த  விழாவில் பசங்க திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட நடிகர் கிஷோர் விருதினை பெற்றார். தாடியுடன் ஆள் அடையாளமே தெரியாமல் வளர்ந்துள்ள நடிகர் கிஷோரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.