மின்சார வாகனம் ஒன்றின் பேட்டரி தீர்ந்து நடுவழியில் தவித்த தீபிகா சர்மா என்ற பெண் வ்லாகருக்கு, நரேந்திர என்ற இந்திய ராணுவ வீரர் செய்த உதவி சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. தனது பயணத்தின் போது சார்ஜ் தீர்ந்துபோன காரை, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த ராணுவ வீரர் அருகில் இருந்த சார்ஜிங் ஸ்டேஷன் வரை தள்ளிச் சென்று உதவியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவிய ராணுவ வீரரின் மனிதநேயத்தைக் கண்டு நெகிழ்ந்துபோன தீபிகா, அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய ராணுவத்திற்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் சல்யூட்டையும் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/Da2xlb3TyVm/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
காரை சார்ஜிங் ஸ்டேஷனுக்கு தள்ளிச் சென்றதோடு நின்றுவிடாமல், அந்த வாகனத்தில் போதிய அளவு சார்ஜ் ஏறும் வரை சுமார் 30 நிமிடங்கள் அந்த வீரர் அங்கேயே காத்திருந்துள்ளார். அந்த பெண் பாதுகாப்பாகத் தனது பயணத்தைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்த பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். “இன்றைய சுயநல உலகில் இதுபோன்ற மனிதர்களைப் பார்ப்பது அரிது” என்று தீபிகா உருக்கமாகப் பதிவிட்ட இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஆபத்துக் காலங்களில் எப்போதும் இந்திய ராணுவம் தான் மக்களைக் காக்கிறது” எனப் பாராட்டிப் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் குவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…