“பிளீஸ் அம்மாகிட்ட வந்திரு செல்லம்” மகனை தர மறுக்கும் தாத்தா – பாட்டி… கணவன் இறந்ததால் மறுமணம் செய்த பெண் கதறல்… கண்ணீருடன் காவல்நிலையத்தில் பாசப்போராட்டம்…!!

By Soundarya on தை 7, 2026

Spread the love

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் உயிரிழந்த நிலையில், அவர் சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் பெற்றோர், அவரது ஐந்தரை வயது பெண் குழந்தையைத் தர மறுத்து தங்களுடனேயே வைத்துக்கொண்டனர். தனது குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அந்தப் தாய் தனது பெற்றோரிடம் பலமுறை முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து, தனது குழந்தையைப் மீட்டுத் தரக்கோரி அந்தப் பெண் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது குழந்தையைப் பார்க்கும் வரை அங்கிருந்து நகரப்போவதில்லை எனக் கூறி, காவல் நிலைய வளாகத்திலேயே தரையில் அமர்ந்து அவர் கண்ணீருடன் பாசப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.