தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர் பட்டினப்பாக்கத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். இருப்பினும், அவரைச் சந்திப்பதற்கு ஆளுநர் தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் சந்திக்க அனுமதி வழங்காத காரணத்தால், கிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த விஜய் பாதிலேயே ‘யு-டர்ன்’ (U-turn) எடுத்து மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பினார்.
