BREAKING: இனி ஆளுநர் உரை தேவையில்லை… சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை..!

By Soundarya on தை 20, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உரையாற்றாமல் வெளியேறியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை நீக்குவதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் இன்று தனது உரையைப் புறக்கணித்துவிட்டு அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் சட்டப்பேரவை மரபுகளுக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்பு என்று முதலமைச்சர் விமர்சித்துள்ளார். இத்தகைய முரண்பாடுகளைத் தவிர்க்கும் விதமாக, இனிவரும் காலங்களில் ஆளுநர் உரை எனும் முறையை விலக்கிவிட்டு மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.