“முதல்ல காசைக் கொடு.. அப்புறம் தண்ணி வரும்!”.. லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்… கடைசியில் காத்திருந்த ‘பகீர்’ ட்விஸ்ட்…!

Spread the love

கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளர் ஒருவருக்கு, குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்த குறி தப்பியிருக்கிறது. கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த ஒருவர் தனது புதிய வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். இதற்கான அனுமதியை மாநகராட்சி உதவி ஆணையர் வழங்கிய போதிலும், களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையை முடிக்கப் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

குடிநீர் விநியோக அலுவலகத்தில் பணியாற்றும் டேப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் பிளம்பர் ஈஸ்வரன் ஆகிய இருவரும், வீட்டிற்கு குழாய்கள் பொருத்தி இணைப்பு வழங்க 5000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். “முதலில் வேலையை முடியுங்கள், பிறகு பணம் தருகிறேன்” என்று வீட்டு உரிமையாளர் கூறியும், “முன்பணமாகத் தந்தால்தான் வேலையைத் தொடங்குவோம்” என அவர்கள் பிடிவாதமாக இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த உரிமையாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டபடி, ரசாயனப் பொடி தடவிய 5000 ரூபாயை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து ஊழியர்களிடம் கொடுக்கச் சொன்னார்கள். காந்தி பார்க் வாட்டர் டேங்க் அருகே மறைந்து நின்ற போலீசார், உரிமையாளர் பணத்தைக் கொடுத்தபோது பாய்ந்து வந்து பிடித்துள்ளனர். டேப் இன்ஸ்பெக்டர் மோகன் பணத்தை வாங்கி பிளம்பர் ஈஸ்வரனிடம் கொடுக்கச் சொன்னபோது, இருவரும் கையும் களவுமாகச் சிக்கினர். இந்த அதிரடி நடவடிக்கையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களைச் செலுத்திய பின்னரும், சாதாரண சேவைகளுக்காக அரசு ஊழியர்கள் இதுபோல லஞ்சம் கேட்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் லஞ்சம் கேட்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்ததோடு, துணிச்சலாகப் புகார் அளித்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்பதையும் உணர்த்தியுள்ளது. தற்போது கைதான இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

4 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

4 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

4 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago