“முதல்ல காசைக் கொடு.. அப்புறம் தண்ணி வரும்!”.. லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்… கடைசியில் காத்திருந்த ‘பகீர்’ ட்விஸ்ட்…!

Spread the love

கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளர் ஒருவருக்கு, குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்த குறி தப்பியிருக்கிறது. கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த ஒருவர் தனது புதிய வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். இதற்கான அனுமதியை மாநகராட்சி உதவி ஆணையர் வழங்கிய போதிலும், களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையை முடிக்கப் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

குடிநீர் விநியோக அலுவலகத்தில் பணியாற்றும் டேப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் பிளம்பர் ஈஸ்வரன் ஆகிய இருவரும், வீட்டிற்கு குழாய்கள் பொருத்தி இணைப்பு வழங்க 5000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். “முதலில் வேலையை முடியுங்கள், பிறகு பணம் தருகிறேன்” என்று வீட்டு உரிமையாளர் கூறியும், “முன்பணமாகத் தந்தால்தான் வேலையைத் தொடங்குவோம்” என அவர்கள் பிடிவாதமாக இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த உரிமையாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டபடி, ரசாயனப் பொடி தடவிய 5000 ரூபாயை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து ஊழியர்களிடம் கொடுக்கச் சொன்னார்கள். காந்தி பார்க் வாட்டர் டேங்க் அருகே மறைந்து நின்ற போலீசார், உரிமையாளர் பணத்தைக் கொடுத்தபோது பாய்ந்து வந்து பிடித்துள்ளனர். டேப் இன்ஸ்பெக்டர் மோகன் பணத்தை வாங்கி பிளம்பர் ஈஸ்வரனிடம் கொடுக்கச் சொன்னபோது, இருவரும் கையும் களவுமாகச் சிக்கினர். இந்த அதிரடி நடவடிக்கையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களைச் செலுத்திய பின்னரும், சாதாரண சேவைகளுக்காக அரசு ஊழியர்கள் இதுபோல லஞ்சம் கேட்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் லஞ்சம் கேட்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்ததோடு, துணிச்சலாகப் புகார் அளித்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்பதையும் உணர்த்தியுள்ளது. தற்போது கைதான இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago