மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். கிராமப்புறப் பஞ்சாயத்துகளுக்கு நேரில் செல்லும் இந்தச் சிறப்பு வாகனங்கள் மூலம் முதியவர்கள் தங்களது இருப்பிடத்திற்கே அருகிலேயே இலவச உடற்பரிசோதனை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை எளிதாகப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சேவையை மேம்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு நடமாடும் மருத்துவ வாகனத்திலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மூத்த குடிமக்களுக்குப் பெரும் உதவிகரமாக அமையவுள்ள இப்புதிய மருத்துவச் சேவைத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.