BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டமானது தற்போது ‘வெற்றி வீடு திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் மரிய வில்சன் தனது வரவு செலவுத் திட்ட உரையின் போது சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இப்புதிய திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, முதல் ஆண்டிலேயே ₹3,000 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 70,000 புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏழை மக்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கவும், பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.