“இரக்கமே இல்லையா சார் உங்களுக்கு..?” மரணத்தின் விளிம்பில் தாய்… லீவு கேட்டபோது மேலாளர் சொன்ன அந்த வார்த்தை… உடனே வேலையை ராஜினாமா செய்த பெண் ஊழியர்..!!

Spread the love

ரெடிட் (Reddit) தளத்தில் என்ற பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை இந்தப் பதிவு விளக்குகிறது. மருந்து தவறாக கொடுக்கப்பட்டதால் காரணமாக காரணமாக அந்தப் பெண்ணின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த இக்கட்டான சூழலில் தனது தாயாரைக் கவனித்துக்கொள்ளவும், குடும்ப நெருக்கடியைச் சமாளிக்கவும் அந்தப் பெண் சில நாட்கள் விடுப்பு கோரியுள்ளார்.

ஆனால் அந்த தனியார் வங்கியின் அந்த மேலாளர், விடுப்பு கேட்ட பெண் ஊழியரிடம் அவரது தாயார் குணமடையவில்லை என்றால், அவரை ஒரு முதியோர் இல்லத்திலோ அல்லது பராமரிப்பு இல்லத்திலோ சேர்த்துவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஊழியர் தனது வேலையா? அல்லது நோய்வாய்ப்பட்ட பெற்றோரா? என்ற தர்மசங்கடமான நிலையில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அப்பெண் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், லாபத்தையும் வேலையையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் “நச்சுத்தன்மை வாய்ந்த நிறுவன கலாச்சாரம்” (Toxic Work Culture) குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு குடும்ப அவசரநிலையின்போது கூட பச்சாதாபம் காட்டாத இத்தகைய போக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Soundarya

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

22 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

44 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

58 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

58 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

1 மணத்தியாலம் ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago