நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்க்குப் பக்கபலமாக இருந்த சங்கீதா, தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் விஜய்க்கு ஒரு நடிகையுடன் இருக்கும் திருமணத்தை மீறிய உறவே இந்த விரிசலுக்குக் காரணம் என்றும், இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த நடிகை சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் விஜய்யின் மௌனம் ஆகியவை சங்கீதாவை இந்த அதிரடி முடிவுக்குத் தள்ளியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், தனது தரப்பு நியாயங்களையும், விவாகரத்து மனுவில் உள்ள உண்மைகளையும் விளக்க சங்கீதா விரைவில் ஒரு முக்கியப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள விஜய்க்கு, சங்கீதாவின் இந்தத் திடீர் ஆக்ரோஷமும், அவர் நடத்தப்போகும் பிரஸ் மீட்டும் பெரும் சவாலாக அமையும்.
இதனைத்தொடர்ந்து அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. நீண்ட கால மௌனத்திற்குப் பிறகு சங்கீதா உடைக்கப்போகும் உண்மைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
